எழுதத் தெரிந்த அனைவருக்கும்
எழுத்துக்களைத் தெரியும்,
முதன் முதலில் எந்த எழுத்தை
யாரிடம் எழுதக் கற்றுக்கொண்டோம்?
அப்பவிடமா ?அம்மவிடமா?ஆசிரியரிடமா?
அப்பாவிடமிருக்கலாம்,
அம்மாவிடமிருக்கலாம்,
ஏன் ஞாபகமில்லை ?
நினைவு வந்துவிட்டது ஆசிரியர்தான்.
எனில் எந்த ஆசிரியர் ?
ஞாபகமில்லை.
முதல் பள்ளி,
முதல் மதிப்பெண்,
முதல் பரிசு,
முதல் பயணம்,
முதல் சுற்றுலா ,
முதல் சமையல்,
முதல் நண்பன்,
முதல் எதிரி,
முதல் வேலை ,
முதல் ஊழியம்,
முதல் ஏமாற்றம்,
எல்லா முதலும்
ஞாபகமிருக்க
முதன் முதலில்
எழுத்தறிவித்தவர்
ஞாபகமில்லாமல்
போனது தவறுதான்,
இனி வரும் தலைமுறைகளுக்காவது
ஞாபகப்படுத்தாமல் போனால் தப்புதான்.
எழுத்தறிவித்து,படிப்பறிவித்தவர்
நம்மை முன்னேற்றி,நமக்கு பின்தான்
நிற்பார்,அவருக்கு சொத்து எழுதித்
தர தேவையில்லை,ஞாபகத் தேவைதான்.
அதுவே நன்றியாம் அவருக்கு.