இரவில் தனியே நடமாடும்போது
பயமில்லை.எதோ பின்தொடர்வதாக
சந்தேகிக்கையில் சாத்தானக வருவது
தனிமை.
நான் தனியே செல்லுகையில்
தனிமையில்லை.எதிரில் இருவர்
சுவாரசியமாக பேசி,மகிழ்ந்தபடி
வருகையில் என்னுடன் வருவது
தனிமை.
எதிபார்த்த அன்பு கிடைக்காதபோது
துணையாவது தனிமை.
மகிழ்ச்சியில் தனிமை இல்லை,
அதனை பகிர உண்மையானவர்கள்
இல்லாதபோது மகிழ்ச்சியடைவது
தனிமை.
தனிமையில் அமைதி இல்லை.
அமைதியில் தனிமை இல்லை.
சந்தேகம்,ஒப்பிடுதல்,ஏக்கம்,எதிர்பார்ப்புடன்
பிறந்திருக்கும் தனி்மையே நீ
தனிமையாக இல்லை.