*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label திருநங்கைகள். Show all posts
Showing posts with label திருநங்கைகள். Show all posts

Apr 21, 2011

திருநங்கைகளின் அட்டகாசம்

திருநங்கைகள் என்ற பிரிவினர் நம்முடன் வாழ்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தற்பொழுது இவர்களுக்கான சித்திரைத் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் பகுதியில் நடைபெற்று வருகிறது.





விழா நடைபெறட்டும்,கொண்டாடட்டும்.வாழ்த்துக்கள்.

இவர்களில் சிலர் கல்வித் தகுதி பெற்று சுய சம்பாத்யமுடன் இருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் சமுதாயப் பார்வையில் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவர்கள் ஆசிர்வதித்தாலும்,சாபமிட்டாலும் பலிக்கும் என்பது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.
திருநங்கைகளின் புழக்கம் வட மாநிலங்களில் அதிகம்.இவர்களில் பெரும்பாலானோர் தனது பிறப்பினையே காரணமாக வைத்து பல வேதனைக்குரிய செய்கையில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று பிச்சையெடுப்பது.

தமிழ்நாடு எக்ஸ்பிரசில் திருநங்கைகளின் அட்டகாசத்தையும் பயணிகள் சிலரது வம்புனித்தனத்தையும் பகிர்ந்தாக வேண்டும்.

சென்னையிலிருந்து தில்லிக்கும்,தில்லியிலிருந்து சென்னைக்கும் தமிழ்நாடு எக்ச்பிரசில் ஸ்லீப்பர் க்ளாசில் பயணிக்கும் போது
திருநங்கைகள் வருவது வழக்கம்.எந்த ஸ்டேசனில் ஏறுகிறார்கள்,இறங்குகிறார்கள் என்பது தெரியாது.பல ரயில்களிலும் இதே நிலைதான்.

ஏசி வகுப்பினுள் பயணிகளும்,ரயில் பணியாளர்களும்  தவிர வேறு யாரும் நுழைய முடியாது.ஸ்லீப்பர் கிளாசில் பல வியாபரங்கள்,பல வகை பிச்சைக்காரர்கள்  வருவார்கள்.திருநங்கைகளும் வருவதுதான் கிலுகிலுப்பு,ரயிலில் அமர்ந்திருப்பவர்களிடம் அவர்களது தொனியில் பேசி,நாணி,கோணி கைத்தட்டி காசு கேட்பார்கள்.கேட்டவுடன் கொடுத்துவிட்டால் தொல்லை பன்னாமல் நகர்ந்து அடுத்தவரிடம் சென்று விடுவார்கள்.5 ரூபாய்க்கு குறைவாய் வாங்க மாட்டார்கள்.பணத்தைப் பெற்றவுடன் சிலர், பணம் தந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து நகர்வார்கள்.




 பார்ப்பதற்கு முரடுத்தனமாய், ரிச் லுக்காய்,சொங்கா மங்கியாய் இருப்பவர்களை ஒதுக்கிவிடுவார்கள்.புதிதாய் திருமணமானவர்கள்,குழந்தை வைத்திருப்பவர்கள்,முக்கியமாக இளைஞர்கள், ஏளனப் பேச்சு ,  ஏளனப் பார்வை பார்க்கிறவர்களை விட மாட்டார்கள்.பணம் கொடுத்தேயாக வேண்டும்.இல்லையெனில் சிலர் சபித்துவிட்டும் போவார்கள்.

இளைஞர்கள் பணம் தர மறுத்தால்,அவர்களை தாகதபடி தொடுவது,முத்தமிடுவது போன்ற சில்மிசங்கள் தாங்க முடியாமல் சில இளைஞர்கள் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

 நமது அக்மார்க் இந்திய  இளைஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
 திருநங்கைகளிடம் சில்மிசங்கள் செய்வார்கள்.ஆட்டம் பாட்டமும் நடக்கும்.பக்கதில் மனைவி மக்களுடன் அமர்ந்திருப்பவர்ளும்,மற்றவர்களும் கண்டும் காணாதது போலவும்,முகம் சுளித்த வண்ணமும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

ஒருமுறை அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர்,  இவ்வாறு வந்த திருநங்கையை கேலி செய்தவுடன் ஒரிஜினலா என்னானு பாரேன்னு தனது சேலையை தூக்கி காமித்தவுடன் அவர்களுக்குள் கெக்கறிப்பு அதிகமாக,பகத்தில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கண்டித்தார்.உனக்குமா சந்தேகம்னு,........,..........,அசிங்கசிங்கமாக திருநங்கை பேச ஆரமித்துவிட்டார்.அந்த பெரியவர் பதில் தர முடியாமல் முகம் சுண்டிப்போய்விட்டார்.தட்டிக் கேட்டால் வீண் வம்பு என அனைவரும்  பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த சம்பவத்தை பதிவில் பகிர்ந்தது தவறென்றால் மன்னிக்கவும்.

தில்லியில் பல சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பதில் திருநங்கைகளையும் அதிகம் காணலாம்.மற்ற பிச்சைக்காரர்களைவிட அதிகாரமாகவும்,கட்டாயப்படுத்தியும் பிச்சையெடுத்து செல்லுகின்றனர்.


ஜனவரி மாதம் நான் கிளிக்கியது.குளிரிலும் சிக்னலில் தொல்லை பன்னும் திருநங்கைகள்.இடம் பீராகடி 
.






மூன்றாம் பாலினத்தவராக பிறந்தவர்கள் சமுதாயத்தில் சக மனிதர்களாய் வாழ  போராட வேண்டியதாக உள்ளது.அதற்காக இப்படி மற்றவர்களை முகம் சுழிக்க வைத்து தங்கள் பிறப்பை கேவலப்படுத்த வேண்டாம். மற்ற மனிதர்களும் இவர்களை இழிவுபடுத்தாமல் இருத்தல் வேண்டும்.