- எழுத்தியல் புகலை
- லிகதக் கலை
- கணிதக் கலை
- வேதம் (முதல் நூல் )
- புராண இதிகாசம் (பூர்வ கதை)
- வியாகரணம்(இலக்கணம்)
- ஜோதிடக் கலை (வான நூல்)
- தரும சாஸ்திரம்
- நீதி சாஸ்திரம்
- யோக சாஸ்திரம்
- மந்திர சாஸ்திரம்
- சகுண சாஸ்திரம்
- சிற்ப சாஸ்திரம்
- வைத்திய சாஸ்திரம்
- உருவ சாஸ்திரம்(உடல் கூறு)
- சப்தப் பிரம்மம் (ஒலிக்குறி நூல்)
- காவியம் (காப்பியம்)
- அலங்காரம்(அணி இலக்கணம்)
- மதுர பாஷணம்(சொல்வன்மை)
- நாடகம் (கூத்து)
- நிருத்தம் (நடன நூல்)
- வீணை (மதுர காண நூல்)
- வேணுகானம் (புல்லாங்குழல் நூல்)
- மிருதங்கம்
- தாளம்(உப இசை நூல்)
- அஸ்திர பயிற்சி(வில் வித்தை )
- கனக பரீட்சை (பொன் மற்று காணும் நூல்)
- ரத பரீட்சை (மகரத-அதிரத சாஸ்திரம்)
- கஜ பரீட்சை (யானை தேர்வு நூல் )
- அஸ்வ பரீட்சை (குதிரை தேர்வு நூல்)
- ரத்ன பரீட்சை (நவரத்ன தேர்வு)
- பூமி பரீட்சை (மண்வள தேர்வு)
- சங்கிராம இலக்கணம் (போர்முறை நூல்)
- மல்யுத்தி (மர்பிடி)
- ஆகர்ஷணம்(அணுகுதல்)
- உச்சாடணம்(அகற்றல்)
- வித்வேஷணம் (பகை மூட்டல்)
- மதன சாஸ்திரம்(கொக்கோகம்)
- மோஹனம்(மயங்குதல்)
- வசீகரணம் (வசியம் )
- இரசவாதம் (உலோகத்தை தங்கமாக்குதல்)
- காந்தருவ வாதம் (கந்தர்வர்களைப் பற்றி ரகசியம்)
- பைபீல வாதம்(விலங்கு மொழி அறிவு)
- கவுத்து வாதம்(துயரத்தை இன்பமாக்குதல்)
- தாது வாதம் (நாடி நூல்)
- காரூடம் (மந்திரத்தினால் விஷமாற்றுதல்)
- நஷ்டப் பிரசனம் (ஜோதிடத்தினால் இழப்பு சொல்லுதல்)
- முஷ்ட சாஸ்திரம் (ஜோதிடத்தினால் மறைந்து சொல்லுதல்)
- ஆகாய பிரவேசம் (விண்ணில் பறத்தல்)
- அதிருசியம் (தன்னை மறைத்தல்)
- இந்திர ஜாலம் (ஜால வித்தை )
- பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாயுதல்)
- ஆகாய கமனம்(வானில் மறைந்து உலாவுதல்)
- மகேந்திர ஜாலம்
- அக்கினிசதம்பனம்(நெருப்பைக் கட்டுதல்)
- ஜலஸ்தம்பனம் (நீர் மேல் நடத்தல்)
- வாயு ஸ்தம்பனம் (காற்று பிடித்தல்)
- திருஷ்டி ஸ்தம்பணம்(கண் கட்டுதல்)
- வாக்கு ஸ்தம்பணம்(வாயை கட்டுதல்)
- சுக்கில ஸ்தம்பலம் (இந்திரியம் கட்டுதல்)
- கன்னஸ்தம்பணம் (மறைந்ததை மறைத்தல்)
- கட்கஸ்தம்பலம் (வாள் சுழற்சி)
- அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்குதல்)
- கீதம் (இசைக்கலை)
இந்த 64 கலைகளும் இந்த நூலில் உள்ளதென்று சொல்ல என்னிடம் ஆதாரமில்லை.சிறு வயதில் எதோ ஒரு புத்தகத்தை பார்த்து லக்ஸ்மி நரசிம்மர் ஸ்தோத்திரம் எழுதும்போது ,அதில் இந்த 64 கலைகள் பதினெட்டு வகை சித்தர்களின் பெயர்கள் இப்படியாக இருந்தது. ஆர்வத்தில் ஒரு டைரியில் எழுதி வைத்தேன்.தற்பொழுது அந்த டைரி கிடைத்ததில் பக்கங்களை படித்தபோது சற்றே கலையவிருக்கும் மையில் தென்பட்டதை அழியாமல் பாதுகாக்க பதிவு செய்துள்ளேன்.(டைரியின் வருடமோ 1997). அந்த புத்தகத்தின் பெயர் விபரம் ஞாபகமில்லை,புத்தகமும் இல்லை.