*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label சிந்தனை செய். Show all posts
Showing posts with label சிந்தனை செய். Show all posts

Mar 12, 2012

எல்லாம் சகஜமப்பா !!!

அடப்பாவமே ! வீட்ல எல்லோரும் எங்க போனாங்களோ தெரியலேயே,

இதான் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் உள்ள வித்யாசம்.
இவரப் பாருங்க,வரும் போதே தலையனையோட வந்திருக்காரு.....

இதுக்கு காரணம் என்னவாயிருக்கும்னு யோசிங்க,
                                       









                                          
அதுங்களுக்கு பிடிச்ச வாழைப்பழம் இப்படி ஆகிட்டேன்னுதான் அப்படியொரு போசு......

ஒரு விழா கூட்டத்திற்கே மலர் கொத்து கொடுக்கிறாங்க போல  



மாடல் அழகி பொம்மைகள்ன்னா நினைக்கிறிங்க,.........
எல்லாம் மவுசுப்பா மவுசு.
அதாங்க கணினிக்கு உபயோகிப்போமே அந்த மவுஸ்.



உங்களால முடிஞ்சா இந்த குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.
உங்களால முடியாதுன்னு நான் சொல்றேன்.
ஏன்னா இது பொம்மை.....  பொம்மை.......
வேணும்னா நல்லா பாருங்க.

குழந்தைன்னு ஏமாந்தவங்கள பாத்து சிரிக்காத! வாய மூடுங்றேன்  
கேக்க மாட்டிங்கிதே,

இருந்தாலும் இருக்கலாம்.


அலாக்கா மேலோடு துக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?
யாராவது அந்த கம்பியையும் தட்டி சேத்து எடுத்துகிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

கலிகாலம்......போனா போவுது பசி தீர்ந்தால் சரி.

இதுதான் நவீன சமையலா? 


மத்த செல்லப் பிராணிகள் போல வாக்கிங் போகனும்னு ஆசைப்பட்ட மீனின்
ஆசையை நிறைவேற்றிய இவர் வாழ்க.மீனும் வெளி உலகம்னா என்னான்னு இப்பதான் பாக்குது.


என்னன்னு புரியுதா?பில்டிங்கை ஒட்டியவாறு வெளிப்புறத்தில் குளம்.( நீச்சல் தொட்டி).உள்ள இருப்பது மீன் இல்ல.மனுஷன்தான்.வேற என்னென்ன இப்படி அந்தரத்தில் வரப்போகுதோ....


ரொம்ப அவசியம்.

மோசமான ஆண்டிங்களா இருக்கிறாங்களே!எல்லாம் பொறாமைதான்.
காதலர் தினத்தை எதிர்க்கிறாங்களாம்!!!  

Feb 11, 2012

இதெல்லாம் எந்த ஊர்ல?.......

குரங்கால மட்டும்தான் மனுசனாக முடியுமா?
நாங்களும் மனுசனாகி சாதிக்கிறோ...ம்...மா இல்லையான்னு பாருங்க!!!

இந்த உணவகம் அவசியம்தான்.வெள்ளத்தில் தத்தளிக்கும் எத்தன பேர் பசி்யைத் தீர்க்கும்.உணவக ஓனருக்கு வாழ்த்துகள்.

இதைத்தான் பகுமானம்னு மதுரைத் தமிழில் சொல்லுவாங்க.

என்னம்மா  யாரோடையாவது சண்டையா?இல்ல வீட்ல தூங்க இடமில்லையா?இல்ல எதாவது சாதனை முயற்சியா?

என்ன ஒரு பாதுகாப்பு!இனிமே கண் எரியுதுன்னு சொல்ல முடியாதுல்ல!

இந்த ஐடியா உங்களுக்கு வருமா?

என்ன ஒரு கண்டுபிடிப்பு.......இப்படி போறவங்களுக்குத்தான் இதன் அருமை தெரியும்.

நிச்சயம் செருப்பு காணாப்போகாதுங்க,ட்யூப்பை கட் செய்துட்டாங்கன்னா கம்பெனி பொறுப்பு கிடையாது.

தலையறுத்து பிரியாணி ஆக்கினாலும் அடங்கமாட்டோம்!

பக்கத்து வீட்லையுமா  ஃப்ரிஜ் இல்ல போலருக்கு,இிதை பக்கத்து வீட்ல எப்படி வைக்கிறது... 

எழுதினவன்  தப்பா?உக்காந்திருக்கிறவங்க தப்பா?

கடலுக்குள்ள   போகும்போது    தாகம்மா இ்ருந்தா  கடல் தண்ணியவா குடிக்க  முடியும். இல்ல உப்பு நீர்  எடுக்கப் போறாங்களா?...ஓ மிதக்கப்போறாங்களா?....
அந்த அம்மா பக்கத்துல இருக்கிற நாற்காலிக்கும் ஆள் வல்ல போலருக்கே!உங்க பேச்சை கேக்க வந்திருக்கிறவருக்கு அந்த நாற்காலியைக் கூட கொடுக்கமாட்டிங்களா?  


ஃபோட்டோ எடுக்கும்போது தொல்ல செஞ்சா இதான் தண்டனை.
.

எல்லோரும் அவங்க வேலைய பார்ப்பாங்களா?உங்களுக்கு ஓடி வந்து உதவி செய்வாங்களா?....இவ்ளோ நல்ல ஆட்டோ வச்சிருக்கிற உங்களுக்கே இந்த நிலமைன்னா...உங்களவிட கில்லாடி ஒருத்தரு ஜம்முன்னு போறார் பாருங்க, அடுத்த படத்த பாருங்கப்பா.

                                   

இதற்கு நிகர் எதுவுமில்லை.எதோ புதுசா கண்டுபிடிச்சிருக்காறோ!!

அடடா! ஒரே ஏர் கூலரிலிருந்து இரண்டு ரூமிற்கு காற்று போறது புரியுதா?என்ன ஒரு சிக்கனம்,கண்டுபிடிப்பு....

இதுக்கு என்ன காரணம்னு நீங்களே யோசிச்சுக்கோங்க!


நீங்க மட்டும் என்னை கடிச்சு சாப்பிடுறீங்களே!எனக்கு எவ்ளோ வலிக்கும்.இனி நான் உங்கள கடிச்சு வச்சித்தான் வலின்னா என்னான்னு புரியவைக்கப் போறேன்னு ஆப்பிள் சொல்லுது.


இதான் முட்டை கண்ணுல பார்ப்பதா?.



நான் தான் வாட்டர் மேன்

Oct 11, 2011

தனிமையே!

இரவில் தனியே நடமாடும்போது
பயமில்லை.எதோ பின்தொடர்வதாக
சந்தேகிக்கையில் சாத்தானக வருவது
 தனிமை.

நான் தனியே செல்லுகையில்
தனிமையில்லை.எதிரில் இருவர்
சுவாரசியமாக பேசி,மகிழ்ந்தபடி
வருகையில் என்னுடன் வருவது 
 தனிமை.

எதிபார்த்த அன்பு கிடைக்காதபோது
துணையாவது  தனிமை.

மகிழ்ச்சியில் தனிமை இல்லை,
அதனை பகிர உண்மையானவர்கள்
இல்லாதபோது மகிழ்ச்சியடைவது
தனிமை.

தனிமையில் அமைதி இல்லை.
அமைதியில் தனிமை இல்லை.

சந்தேகம்,ஒப்பிடுதல்,ஏக்கம்,எதிர்பார்ப்புடன்
பிறந்திருக்கும் தனி்மையே நீ
தனிமையாக இல்லை.

Mar 25, 2011

உருவமும் மொழியும் அற்றவர் கடவுள் - பகுதி மூன்று


வீட்டிற்கு ஆகும் செலவுகளில் கோவிலுக்கு செல்லவும்,கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யத் தேவையான பொருட்கள் வாங்கவும் சேமித்து வைத்திருப்பார்கள்.ஆனால் கண்ணில் படும் ஏழைகளுக்கு அந்த சேமிப்பில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வோம்,கடவுள் அந்த ரூபத்திலும் இருக்கிறார் என்பதை உணரமாட்டார்கள்.அந்த ஏழைகளை உதாசினப் படுத்தாமல்,கடிந்து கொள்ளாமால் இருந்தால் அப்போதும் கடவுள் தங்களுக்கு அருள் புரிவார் என உணர வேண்டும்.

அர்ச்சனை செய்த பின் ஒரு தேங்காய் மூடி, வெற்றிலைப் பாக்குடன் அர்ச்சனை செய்து தரும் அந்த பூசாரிக்கு  (பிராமினருக்கு) கொடுத்தால் நல்லது என்பார்கள் சிலர்.அப்படி கொடுத்தால் சில பூசாரிகள் (அர்ச்சனை செய்து தருபவரை இப்படி குறிப்பிடுகிறேன்.)பெற மறுப்பார்கள்.கோவிலில் பணி புரியும் அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர வழியில் தென்படும் எளியவர்களுக்குக் கொடுத்தாலும் நல்லதுதான்.அதிலும் சிலர் கவுரவப் பிரச்சனையாகக் கொண்டு பெற மறுத்துவிடுகின்றனர்.

அர்ச்சனை செய்தபின் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.யாருக்காவது கொடுத்தால் நமது புண்ணியம்,கோவிலுக்குள் கடவுள் நமக்குத் தந்த வரம் மற்றவர்களுக்கு போய்விடும், எனவே யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும் பலர் செல்லுகின்றனர்.கோவிலில் கொடுக்கப்படும் திருநீற்றையும்,குங்குமத்தையும் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் போதுமானதாக இருக்காதா?பத்து பேருக்கு அன்னதானம் செய்யாவிட்டாலும்,இந்த சிறிய தானமாவது செய்யலாமே!  

கோவில்களும் தற்போது வியாபார சந்தையாகவே மாறி வருகிறது. அங்கனம்,அர்ச்சனை செய்து தருபவர்களே (சில மக்கள் குணம் உணர்ந்தோ என்னவோ) ஒரு தேங்காய் மூடியை எடுத்துக் கொண்டுதான் நமக்குத் தருகிறார்.அப்படியெனில் கடவுள் நமக்குத் தரும் ஆசிகளில் சிறிது அந்த பூசாரிக்கு போய் சேருகிறதே என யாரும் கேட்பதில்லை.அகர்பத்திகள் மற்ற சில பொருட்கள் அப்படியே ஒரு மூலையில் எறியப்படும்.மற்ற மத ஆலயங்களிலும் சில நேரம் பார்த்துள்ளேன்,சில பொருட்கள் தவிர மற்றவைகள் ஓரங்கட்டப்படும்,அதை ஏன் அர்ப்பணிப்புப் பொருளாக வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்,ஏன் வாங்க வேண்டும்.சிலர் தட்சனை வையுங்கள் என கேட்கின்றனர்.சிலர் ரெண்டு ரூபாய் வைத்தால் கோபத்தில் எடுத்துக் கொள்வதில்லை,மினிமமே ஐந்து ரூபாய் வைக்க வேண்டும்.சில பூசாரிகள் தட்டில் தட்சனை வைத்தால் கூட எனக்கேதற்க்கப்பா  உண்டியலில் போடுப்பா என்று சொல்பவரும் இருக்கிறார்கள்.தட்சணை பத்து ரூபாய் வைக்க சில்லரை இல்லாமல் பூசாரியிடமே   சில்லரை மாற்றி தட்சணை   
வைப்போரும்,பெறுவோரும் உண்டு.

கடவுளுக்கு பூ மாலை தொடுத்து வியாபாரம் செய்பவன், கடவுளே இன்று நிறைய பூவும்,பூ மாலையும்,வியாபாரம் ஆக வேண்டுமென வேண்டிக் கொள்வானாம்.பக்தனில் ஒருவன் கடவுளே உனக்கு ஐந்து ரூபாயில் பூமாலை சாற்றுகிறேன்,எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம்,மற்றொரு பக்தன் கடவுளே உனக்கு இருபத்தியைந்து ரூபாயில் பூ மாலை சாற்றுகிறேன் எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம்,மற்றொரு பக்தன் கடவுளே உனக்கு அழகான பெரிய பூமாலைகள் வாங்கி அணிவித்து பிரார்த்திக்கும் சக்தி எனக்கு இல்லை, எனவே எனது தோட்டத்தில் உள்ள இந்த செம்பருத்தி பூவையும்,தெரு முனையில் உள்ள நந்தியாவட்டை பூவையும் நானே தொடுத்து வந்துள்ளேன்,எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம். இதை நான் எங்கோ எப்போதோ யார் சொல்லியோ கேள்விப்பட்டேன்.

எனக்கு இது சம்பந்தமாக மற்றொன்றும் நினைவிற்கு வந்தது.மொத்த விலை பூ வியாபாரிகளிடம்,பூக்களை படிக்கணக்குகளில் வாங்கி,சுய தொழிலாக வீட்டு வேலைகளை முடித்து விட்டு அந்தப் பூக்களை தொடுத்து அனுப்புவார்கள், அனைத்து மதப் பிரிவினர்களுக்கும், சுப மற்றும் அசுப காரியங்களுக்கும் அந்த பூமாலைகள் பயன்பட்டாலும்,அவர்களுக்கு  கொடுக்கப்படும் கூலி மிகச் சொற்பமே.அங்கனம் இவர்கள் தொடுத்ததை வியாபாரம் செய்யப்பட்டு எதோ ஒரு மத  கடவுளுக்கு அவர்களின் பூமாலை அணிவிக்கப்பட்டால் கடவுளின் அருளில் இவர்களுக்கு எத்தனை விகிதம் கிடைக்கும்.     இப்போது கடவுள் யார் பக்கம்? (கடவுள் யாரிடம் டீல் வைத்துக் கொள்வார்)

எதையும் ஆழமாக சிந்தித்து செயல்பட சிரமமேன்றாலும்,கடவுள் பேரில் மூட நம்பிக்கை இல்லாத,மற்றவர்களை பாதிக்காத பக்தி சிறந்தது.