*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Mar 15, 2016

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவிட ,என்னை எழுதத் தூண்டும் அன்பில் அழைத்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்.தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

பயணங்கள் பல விதம்தான்.பதின்ம வயதின் பேருந்து பயண அனுபவம் பற்றி 5 பகுதிகள் எழுதியுள்ளேன்.பயணிக்க விரும்பாதோர் வெகு சிலராக இருக்கலாம்.எவ்வித பயணங்களாக இருந்தாலும் சுகமாகவோ அல்லது வேதனையாகவோ ஒரு அனுபவம் அமைந்துவிடும்.சூழ்நிலைகளைப் பொருத்தும் கால மாற்றத்திலும் அந்த அனுபவங்கள் மனதில் பதிந்து போகும் அல்லது மறந்துபோகும்.

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான்உங்கள் முதல் ரயில்பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

               சிறு வயதில் உள்ளூர் ரயில் நிலயத்திற்கு எனது அப்பாவுடன் ரயில் பார்க்கச் செல்வேன். சப்தமுடன்  கண்ணுக்கெட்டிய வரை தொடர் வண்டியாய் செல்லும் ரயிலை பார்த்து ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.ஆனால் ரயிலில் பயணிக்க விரும்பியும் வாய்ப்புகள் இல்லை.9 ஆம் வயதில் ஒரு சிறிய விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருவெரும்பூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் எதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன்.

குணமாகி வீடு திரும்பகையில் மற்ற வாகனங்களில் செல்ல பலர் ஆலோசனை சொன்னாலும் ,கேக்காமல் என் விருப்பத்திற்காகவே என் அப்பா ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார்..அதுவே என் முதல் ரயில் பயணம். மறக்கவே முடியாதது.

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

               இதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் குடும்பத்தார் அல்லது நட்புகளுடன்  பயணித்திருந்தாலும் , கல்லூரிக்கு  முதன் முதலாக தனியாக பேருந்தில் சென்றதுதான் எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சி.ஏனெனில் பெற்றோர் துணையின்றி பயணித்த அந்த முதல் நாள் எதோ பெரும் சாதனை புரிந்துவிட்டதாகவும், சாதனை செய்ய ரதத்தில் செல்வதாகவும் எண்ணினேன். ( என்ன சாதனை புரிந்தீர்கள் என்று கேக்கப்பிடாது )

3. எப்படிப்  பயணிக்கப் பிடிக்கும்?  

குடும்பத்தாரோ அல்லது நட்புடனோ பயணிக்க வேண்டும்.வேடிக்கைப் பார்த்துக்கொண்டேவும் ஏதேனும் பேசிக்கொண்டேவும் பயணிக்க வேண்டும்.நம்மை சகித்துக்கொண்டு நட்புடன்  அல்லது அமைதி காக்கும் சக பயணி வேண்டும்.பிடித்த ஸ்நாக்ஸ் அல்லது இனிப்புகள் அவ்வப்போது சாப்டுக்கொண்டே பயணித்தலும் பிடிக்கும்.


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

4.மெல்லிசைப் பாடல்கள் கேட்க விருப்பம்.பயணிக்கும் போது கேட்ட சில பாடல்கள் பிறகு வரும் நாட்களில் விருப்பப் பாடல்களாகவும் அமைந்துவிடுகின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும்.


5. விருப்பமான பயண நேரம்?
அடை மழை இல்லாத மற்ற அனைத்து கால நேரத்திலும் பயணிக்க விருப்பம்தான்.


6. விருப்பமான பயணத்துணை?
.
என்னை சகித்துக்கொள்ளும் என் கணவர் மற்றும் என் பிள்ளைகள்தான் விருப்பத் துணை.

 7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

.பயணத்தில் படிக்க விரும்பமாட்டேன்.

.8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 8
 அப்படி எதுவும் இல்லை.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

.கேட்பதோடு சரி.

10. கனவுப் பயணம் ஏதாவது? 

அப்படிஎதுவும் இல்லை.தற்சமயம் செல்லும் பயணங்கள் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே கனவாக உள்ளது..


                                                                                                                     *நன்றிகள்*.


Sep 5, 2011

மூன்று முத்துக்கள்

இன்று ஆசிரியர் தினம்.
என் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களை நினைவில் கொண்டும்,மற்ற பிற அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

தொடர் பதிவு எழுத அழைத்த சகோதரி  ஏஞ்சலின் அவர்களுக்கு நிறைந்த நன்றிகளை தெரிவித்து தொடங்குகிறேன்.

1. நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?          
         என் குடும்பம்
      * உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம்      செய்யாமல் வாழ வேண்டும்.
      * எதிர்பார்ப்பில்லாத நட்பு

2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
      * ஏமாற்றுதல்
      * குத்தல் பேச்சுகள்
      * அவதூறு பேசுதல்

3. பயப்படும் மூன்று விஷயங்கள்?
     சிறுபிள்ளையில் இரவில் நாய் அழுவதைக் கேட்டால் அதிகம் பயப்படுவேன்.எதுவாக இருந்தாலும் சகித்துக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டதால் தற்போழுது எதற்கும் பயம் என்று தோன்றுவதில்லை.

4. உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
     * மரணமும், மரணத்திற்கு பின் ஆன்மா என்னாகிறதென்று ஆளுக்கொரு கதை சொல்றாங்களே!(இறந்துதான் தெரிஞ்சுக்கனும் போல)
    *  எதுவாக இருந்தாலும் நிறையபேருக்கு உடனே புரிந்துடுதே?
    *  அரசியல்

 5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
  * மடிக்கணினி மற்றும் கணினி சம்மந்தப்பட்டவைகள் மட்டும்.

6. உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
   * ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள்
   * என் மகளின் குறும்புகளும் மழலைப் பேச்சுகளும்.
   * முதன் முதல் எதற்காக சிரித்திருப்பேன் என்பது
நினைவில்லை.ஆனால் துன்பம் ஒன்று நிகழ்ந்ததில் சிரிப்பு என்பதையே மறந்திருந்த காலத்தில் சிரிக்கும் சூழ்நிலை வந்தாலும் உதட்டளவில் சிரித்த காலத்தில் பதிவர் ஒருவரின் பதிவை எதார்த்தமாக படித்த போது மனதார சிரித்தேன்.உண்மையில் எனது  வேதனையின் கனம் குறைந்ததாய் உணர்ந்தேன். துன்பத்திலிருந்த என்னை சிரிக்க வைத்த அந்த பதிவை
நேரமிருப்பின் நீங்களும் படித்து பாருங்களேன்

7. தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?
     * என் குடும்பத்தின் பொறுப்பாளர்
     * தையற்கலையை ஒழுங்காக செய்வதற்கான முயற்சிகள்
     * இலக்கியம்,கதை,கவிதை,பொதுநலம்,சமூகசிந்தனை,நகைச்சுவை மற்றும்  பல பிரிவுகளிலும் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பதிவுலகில் நானும் பதிவு எழுதுகிறேன்,மறுமொழியிடுகிறேனென்று வலம் வந்துகொண்டிருக்கிறேன்.

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
    * எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும்.(நான் அவ்வளோ மந்தம்)
மற்றபடி என் வலைதளத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் “நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்”என்பதுதான்

9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
     * என்னை வேதனைக்கு உள்ளாக்கியவர்களிடமும் இன்முகத்துடன் பழகுவேன்.
     *  என்னை சார்ந்தவர்களுக்கும் நட்புகளுக்கும் தொல்லை கொடுக்காதிருப்பது(பிறகு ஏன் பதிவு எழுத வந்தனு யாரோ முனுமுனுக்கிறாங்கப்பா…)
    * எளிமையான கைவினைப் பொருட்கள்

10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?.
     * பொய்கள்
     * புறம் பேசுதல்
     * தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது

11. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
     * உள்நோக்கங்களை  புரிந்துகொள்வது எப்படி?
       *    கணினி &
வண்ணமற்ற தலையணி உறையின் பூக்கள்,இலைகளில் ஃபேப்ரிக் பெயிண்டிங் கொண்டு வண்ணமிட்டுள்ளேன்
இதில் உள்ள பச்சை நிற கொடிகளும்,முக்கோணங்களும்,29 சிறிய பொம்மைகளும் நான் வரைந்தது
 
வரைபடங்களை  ட்ரேசிங்  செய்து  வண்ணமிடும் புத்தகத்தை  என் தோழி ஒருவர்  கொடுத்திருந்தார்.அதில் உள்ள இந்த பெண் வரைபடம் ஒன்றை சேலையின் முந்தானை பகுதியில் ட்ரேசிங் செய்து  3டி கலர்&ஃபேப்ரிக் பெயிண்ட் கொடுத்துள்ளேன்.

இது போன்ற பல வேலைப்பாடுகள் கற்றுகொள்ள விரும்புகிறேன்

12.  பிடிச்ச மூன்று உணவு வகை?
     * அம்மா சமைத்து தந்த உணவுகள் அனைத்தும்
     * ருசியான,சுத்தமான அனைத்து சைவ உணவுகளும்,இனிப்புகளும்

13. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
     * தற்சமயம் விக்ரம் நடித்த தெய்வத் திருமகன் பாடல்கள்
     * மெலடியான பாடல்கள்.(எந்த பாடலானாலும் ரெண்டுவரிக்கு மேல்  ராகம் வராது)

14. பிடித்த மூன்று படங்கள்?
    * காதலர் தினம்(தோழிகளுடன் முதன் முதலாக பார்த்த படம்)
    * அலைபாயுதே
    * மொழி

15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்   
    * தேவையான உணவு,உடை,தங்குமிடம்,பணம்,
    * ஆரோக்கியமான உடல்
    * நல்ல உள்ளம்

16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
     * எனக்கு பதிவுலகில் நட்புகள் மிகக் குறைவு.எனக்கு தெரிந்த நட்புகள் அனைவரும் இந்த தொடர் பதிவினை முடித்துவிட்டார்கள்.பிறரை அழைக்கலாம் என்றால் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது கட்டாயத்தினால் தொடர்வார்களா அல்லது மறுத்துவிடுவார்களா என யோசிக்கவேண்டியுள்ளதால் நமக்கான நேர்காணல் போன்ற இந்த மூன்று முத்துக்கள் தொடர் பதிவை விருப்பமிருக்கும் பதிவர்கள் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.