*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Feb 14, 2011

இவரின் பார்வையில் காதல் - பகுதி இரண்டு

  • எத்தனைக்கு அன்பு செலுத்துகிறோமோ,அத்தனைக்கும் சார்ந்திருக்கிறோம் நம் அன்புக்குரியவரும் நம்மைச் சார்ந்திருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறோம்
  •  
  • காதல் இன்னதென்று அறிய மாட்டோம்.அதன் அடையாளங்களான சந்தோசம்,வலி,பயம்,கவலை இவற்றை அறிவோம்.

  • காதல் இயல்பானது,காலையில் உதிக்கும் சூரியன் போல .

  • காதல் மெய்ப்பொருள்.தியானம் மெய்ப்பொருளின் அழகு.

  • காதல் துயரத்தின் முடிவு.எங்கே துன்பங்கள் விலகிப் போகிறதோ,துயரங்கள் விடை பெறுகிறதோ அங்கே  காதல் இருக்கிறது.

  • காதலுக்காக ஏங்குங்கள் ,ஏங்காமல் காதல் இல்லை.

                
  • காதல் என்பது ஒட்டுமொத்த நேசிப்பு.கருணையின் மறு வடிவம்.

  • புலன்களால் உணர்வது ஒரு சிந்தனை.அது காதலாகாது.

  • கற்பனை,எண்ணம்,பற்றுதல்,புறக்கணிப்பு எல்லாம் வெறும் புகைச்சுருள்கள்,புகை இல்லாத போது காதல் கொழுந்து விட்டு எரியும்.

  • உள்நோக்கமும்,நிர்பந்தங்கள் அற்றதுமான காதல் நிலைக்கும்.

இந்த காதல் வாசகங்களுக்கு சொந்தமானவர் திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

இவருடைய  புத்தகத்திலிருந்துதான்  இந்த காதல் வாசகங்களை சேகரித்தேன்.  


இவர் சொல்லாத விசியங்கள் இல்லை.அதில் காதலும் ஒன்று.