*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 1, 2011

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு ரூபங்களில் என் வலைதளத்தில் விநாயகர் காட்சி தருகிறார்.நடைபெறும் பூஜையிலும் அனைவரும் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள் !மேள தாள,இசை வாத்தியங்களுடன் தங்களை விநாயகர்கள்  வரவேற்கின்றார்கள்
இங்கிருக்கும் இருக்கையில் அமருங்கள்.இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.  தரிசனங்களைக்  காணுங்கள்.

















இதுவரை  கண்டுகளித்தமைக்கு நன்றி.அபிசேக ஆராதனையிலும் பங்குபெறுங்கள்
தீபாராதனை முடிந்து அலங்கரிக்கப்பட்டுள்ள பெருமானுக்கு படையலும் நடைபெறுகிறது.பிரசாதங்களை எடுத்துக்கொள்ளவும்.மறக்காமல் தாம்பூலமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பல்வேறு ரூபங்களில் இவ்வளவு நேரம் நமக்காக தரிசனம் தந்த விநாயகர் கொழுக்கட்டை சாப்பிட்ட அசதியில் உறங்கிக்கொண்டுள்ளார்.சற்று இளைப்பாரட்டும்.உறக்கத்திலும் நம்மை கவனித்துக்கொண்டிருப்பார்.விநாயகரின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
போற்றி,போற்றி
******வாழ்க வளமுடன்.******

அனைத்து படங்களும் இணையதளத்திலிருந்து  எடுக்கப்பட்டவைகள்.

Aug 30, 2011

நிகழ்ந்தவைகளும் நிகழ்பவைகளும்

பேருந்தில் நடத்துனர் மீதி பணம்                     தரவேண்டுமெனில் நமக்கும் நடத்துனருக்கும் பார்வையிலும்,மனதிலும் பனிப்போர் நடக்கும்.தில்லியில் சில தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பணம் வசூலிக்கிறாங்க,ஆனால் டிக்கெட் கொடுக்கமாட்றாங்க.கேட்டால் தருவோம்ங்கிறாங்க பிறகு அவ்ளவுதான் நம் ஸ்டாப்பிங் வந்துவிடும். மீதி பணமாக இருந்தாலும்அல்லது அலட்சியப் படுத்தப்டுகிறோம்.நின்னு கேட்டு வாங்கலாம்.டிக்கெட்டுதான போயிட்டுபோகுதுனு வந்துட வேண்டியதாக இருக்கு.ஆனால் இப்படியான பேருந்துகளில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சில்லரை ரெடியாக வைத்திருந்து மீதத்தை உடனே தந்துவிடுகிறார் நடத்துனர் .25 ரூபாய்  டிக்கெட்டாக இருந்தாலும் டிக்கெட் தருவதில்லை.

தமிழகத்தில் நான் பார்த்தவரை நமக்குத் தேவையான ஸ்டாப்பிங்களின் வழியாக பேருந்து செல்லுமா என விசாரித்து செல்லுவோம்.நடத்துனரும்   ஆம் இல்லை என்று பதில் சொல்லுவார்.ஸ்டாப்பிங்குகள் இல்லாத பட்சத்தில் பக்கத்து ஸ்டாப்பிங்கில் இறங்கினால் எளிதில் செல்லலாம் என்ற பட்சத்தில் மட்டுமே வேறு ஸ்டாப்பிங்குகளில் இறக்கிவிடப்படுவோம்.






தில்லியில் ஹிந்தி தெரியாதவர்கள் பேருந்துகள் மூலம் எங்காவது செல்பவர்கள்,ஹிந்தி தெரிந்திருந்தாலும் முற்றிலும் வழி தெரியாதவர்கள் பேருந்துகளில் விசாரிக்க செல்லும்போது உள்ளூர் பேருந்து நடத்துனர்கள்  ம்....போகும்,ஏறுனு சொல்லி செல்ல வேண்டிய இடத்திற்கு பக்கத்தில் இறக்கிவிட்டு இன்னும் தில்லியை நன்றாக சுற்றிப்பார்க்க  வைக்கிறார்கள்.


இதே போன்ற மக்களிடம் பொதுவாக ஆட்டோகாரர்களும் ,ரிக்‌ஷாகாரர்களும் அடுத்த தெருவிற்கு செல்வதற்கு  வேறு நாலாபக்கம் சுற்றிவிட்டு பிறகு வந்து இறக்கிவிடுவதும்,அதிக பணம் வசுலிப்பதும் நடைபெறுகிறது.இது பொதுவாக அனைத்து இடங்களிலும் நடக்கலாம்.

ரிக்‌ஷா சவாரி அதிகம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.ஆட்டோ போகாத இடங்களுக்கும் ரிக்‌ஷாவில் போக முடியும்.என்னைப் பொருத்தவரை ரிக்‌ஷா சவாரி பாவமான செயலாகத் தெரியும்.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே ரிக்‌ஷாவில் செல்லுவேன்.அரை கி,மீ அல்லது ஒரு கி,மீக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள் ரிக்‌ஷாகாரர்கள்.ஆனால் பலர்  குறைந்தபட்சம்  பத்து ரூபாய் வாங்குகிறார்கள்.செல்லும் தூரத்தைக்கொண்டும் பணம் கேட்பார்கள்.

இந்த காலத்தில் சின்ன குழந்தைக்கு கூட குறைந்தது பத்து ரூபாய்க்கு எதாவது வாங்கிக் கொடுத்தால்தான் கொஞ்சமாவது மதிப்புள்ளது போல தோன்றுகிறது.இந்நிலையில் அஞ்சுக்கும் பத்துக்கும் நமது முழு எடையையும் சுமந்து பெடல் மிதித்து செல்லும் தொழிலாளியிடம் பேரம் பேசுபவர்களை பார்க்கும்போது மனம் சங்கடப்படுகிறது.அதே நேரம் குறைந்த தூரத்திற்கு ரெண்டு மடங்கு வசூலிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு ரிக்‌ஷாவில் பருமனான இரண்டு பெண்களை ஏற்றிவந்த ரிக்‌ஷாகாரர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த காரில் மோதிவிடாமல் திருப்ப முயன்றபோது தடுமாறி ரிக்‌ஷா அந்த காரின் மேலே மோதி பயணித்த பெண்கள் உட்பட கவிழுந்துவிட்டனர்.அருகிலிருந்தோர் கூடி உதவ முற்படுகையில் காரில் வந்த நபரும் இறங்கி வந்தார்.அவர் என்ன செய்தார் தெரியுமா?ரிக்‌ஷாகாரரை பளார்னு அரைந்தார்.தன் கார் கண்ணாடி சேதமாகிவிட்டதற்கு  அந்த ரிக்‌ஷாவை விற்றால் கூட ஈடுகட்ட முடியாதென்று கூச்சலிட்டார்.யாரும் காரில் வந்த நபரை கட்டுப்படுத்தவில்லை.அந்த ரிக்‌ஷாகாரர் மீண்டும்,மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.வழியில் வந்த மற்ற ரிக்‌ஷாகாரர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

மற்றொன்று:

 போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கண்ணாடி டீப்பாயை மட்டும் ஏற்றிவந்தார்  ரிக்‌ஷாகாரர். சாலையின் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது அந்த டீப்பாய் சரிந்து விழுந்து மேல்தட்டு பகுதி சுக்குநூறாக உடைந்தது.அவ்ர் தவித்ததை நேரில் பார்த்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.அக்கம்பக்கத்தில் போகிற வாகனங்களை எப்படி அவர் நிறுத்த முடியும்.எல்லா வாகனங்களும் சாரை சாரையாக செல்லுகிறது.இவரால் ரிக்‌ஷாவை சற்றுகூட திருப்பமுடியவில்லை.நான் என்ன பன்னுவேன்,என்ன பதில் சொல்லுவேனு அவர் புலம்பியதை என்னவென்று சொல்ல...

அன்னா ஹசேரா அவர்களின் வெற்றி தோல்வியிலாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,இத்தனை நாள் போராட்டத்தில் பொது இடங்களில் கலவரம்,பொது மக்களுக்கு உயிர்சேதம் இல்லாமல் நடந்தவரை நல்லது.ஆனால் இப்போது போராட்டம் என்றால் உண்ணாவிரதம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கலாம்னு கத்துகொடுத்துவிட்டார்.கலவரம் இல்லா போராட்டங்கள் சிறந்ததுதான்.தொலைக்காட்சி சீரீயல்களில் கூட உண்ணாவிரதம் இருக்கப்போறேன்னு காட்சிகள் அமைப்பு வருகிறது.

ஒரு குட்டி  சந்தோஷம்

விடுமுறைக்கு சென்றுவந்த என் மகள் ஹிந்தி பேசுவதை மறந்துவிட்டாள்.விடுமுறை முடிந்து வந்த போது ஹிந்தி பேசினால் புரிந்துகொண்டாள்.ஆனால் பதில் சொல்ல கஷ்டபட்டாள்.இந்நிலையில்  பள்ளி வேன் டிரைவரை பையா என அழைக்க மறந்து அண்ணா என்று கூப்பிட டிரைவரும் காதில் வாங்கவில்லை போல.பிறகு பையா என்று அழைத்தாலும்  சக பிள்ளைகளும் அண்ணா அண்ணா என்று கேலி செய்துள்ளனர்.சக பிள்ளைகளின் பெற்றோர் வரை இந்த அண்ணா என்ற வார்த்தை தெரிந்து் ரெண்டு அம்மாக்கள் என்னை விசாரித்தார்கள்,அண்ணா அண்ணானு உங்க பொண்ணு சொல்லிச்சாமே என்று.பையாவின் அர்த்தம்தான் அண்ணா என்று சொன்னேன்.ஆனாலும் மனதிற்குள் சின்ன ஆதங்கம் இருந்தது.என்னவெனில் அண்ணன் என்று தமிழில் சொல்லும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கும்.இப்படி விளக்கம் கொடுக்குறோமேனு நினைச்சேன்.

தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோராலும் அதிகமாக உச்சரித்ததும், கோஷங்கள் முழங்கியதும் அன்னா,அன்னா(ஹஷேரா) என்றுதான்.(கொஞ்சம் ஓவரா இருக்கோ....?)

கோகுலாஷ்டமியன்று எங்க காலணியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் அன்னா ஹசேராவாக வேடமிட்டு அவரின் வசனங்கள் பேசி அதிக கைதட்டல்களைப் பெற்றான்.இனி மாறுவேடப் போட்டிகளில் மாணவர்கள் மனதில் அன்னா ஹசேராவும் இடம்பெறுவார் .

Aug 24, 2011

பாரத பெண்களுக்கு சுதந்திரம் நிறைய கிடைத்துவிட்டது.

இந்த பதிவு பெண்கள் அனைவருக்கும் அல்ல. பொது மக்களில் ஒருவளாய் மனதில் தோன்றுவதை பதிய விரும்புகிறேன்.வயிற்றெரிச்சலுடனும் துவங்குகிறேன்.

சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும்  யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,.நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் நம் சக்திக்கும்,சமுதாய மரியாதைக்கும் உட்பட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமென சில நல்ல கட்டுப்பாடுகளும்,குணங்களும்,பழக்க வழக்கங்களும் தமக்குத்தானே தோன்றுமெனில்,வகுத்துக்கொள்ள முடியுமெனில் அவன் நிச்சயம் மனிதனாக இருப்பான்..ஆனால் உன் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை,உன்னை அடுத்தவர்கள் கேவலமாக நினைக்காதவரை எப்படி வேண்டுமானாலும்  வாழ்வதும் நம் சுதந்திரம்தான்.
தற்போதைய சில பெண்களின் ஆடை நாகரீகம் பற்றியதுதான் இந்த பதிவு.

இரண்டு வயதிலிருந்து பத்து வயது பெண் குழந்தைகள்  அரைக்கை சட்டை,அரை/முழுப்பாவாடை அணிந்து வந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும்.அதே குழந்தை 15 வயதுக்கு மேல் அரைப்பாவாடை அணிந்திருந்தால் அவளின் பெற்றோர்க்கு குழந்தையாகவே தெரியலாம்.மற்றவரின் கண்களுக்கு?...
அதே பெற்றோர் அழகாகதான் இருக்கிறது.இதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டாம்,முழு உடையோ முக்கால் உடையோ அணிந்து செல் என்று சொல்பவர் சிறந்த பெற்றோர்.தனக்கே கூச்சம்,வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் பெற்றோர் இப்படி சொல்வதைக் கேட்டாவது எது அழகு,எது நாகரீகம் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை,என் இஷ்டம்தான் என்றால் அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது.

சட்டை அரைக்கையோ அரைப்பாவாடையோ ஆபாசாமில்லாமல் ஆடைகளை அணிய வேண்டும்.ஆபாசமான ஆடைகள் அணிவது என்ற வார்த்தையே பெண்களுக்குதான்.ஆண்கள் இந்த உடை அணிந்துள்ளதால் ஆபாசமாகத் தெரிகிறான் என்று யாருக்கும் இதுவரை தோன்றிருக்காது.
பாவடை தாவணி அழகுதான்.ஆனால் சுடிதாரில் இருக்கும் பாதுகாப்பு தாவணி அணிவதில் இல்லைதான்.பாவாடை தாவணி மலையேறிப்போய் இப்போ சுடிதாரையும் தாண்டி ஜீன்ஸ் அணியும் காலத்தில் இருக்கிறோம்.

எல்லோர்க்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்விருக்கும்.எதை அணிந்தாலும் பார்ப்பவர்கள் ‘ ட்ரசையும்,ஆளையும் பாரு’ என்றோ,சபலத்தை தூண்டுமளவிற்கோ ஆடை அணிய வேண்டாம்.உடுத்திருப்பதை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வேண்டாம்,எதோ தெரியுதேனு பார்க்க வைக்க வேண்டாம். துப்பட்டா போடாத எல்லா பெண்களுமோ,கைப்பகுதி இல்லாமல் அணிந்திருக்கும் எல்லா பெண்களுமோ ஆபாசமாகத் தோன்றுவதில்லை.உடல் வாகைப் பொறுத்தும்,அணியும் உடையைப் பொறுத்தும் விகாரமும் ஆபாசமும் தெரிகிறது.

ஆடை குறைப்பு இல்லாமலும், அங்கங்களை உடை போர்த்தி கவர்ச்சியாக காட்டாமலும் ஒரு   பெண்ணால் ஒரு ஆணை கவரமுடியும் .திருமணம் ஆகாத மற்றும் திருமணமான சில பெண்கள்   மற்றவர்கள் பார்வையை ஈர்க்க அல்ல ஈர்க்க வைக்கவே அணிந்து கொள்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகமெனில் இப்படிப்பட்ட பெண்கள் யாரோ ஒரு பெற்றோர்க்கு மகளாகவோ,சகோதரியாகவோ,மனைவியாகவோதானே இருப்பார்கள்.அப்படியிருந்தும் பார்வைகள் சலனப்படுமளவிற்கு ஆடை அணிபவர்களை கேட்க ஆளில்லையா?அல்லது கேட்பார் யாருமில்லையா?அப்படியா சுதந்திரம் முத்திப்போய்விட்டது.அல்லது இதற்கு பேர்தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்பதா?

ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?

வட மாநிலங்களில் கேக்கவே வேண்டாம்.
பெற்றோருடனும்,சகோதரனுடனும்,கணவனுடனும் சில பெண்கள் இல்லை முக்காவாசி பெண்கள் மிக மாடன் ட்ரஸ்களும்,இருக்கமான உடைகளும் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை.உன் பொண்ணுக்கு எந்த ட்ர்ஸ் வேணும்னாலும் போட்டு அழகுப்பாரு,உன் சகோதரியை எவன் பாத்தா எனக்கென்னா,உன் பொண்டாட்டி எப்படி இருந்தா எனக்கென்னா?என் பிள்ள கெட்டுடக்கூடாது,என் சகோதரன் மனது வீணாகிடக்கூடாது,என் கணவன் யாரையும் ரசித்திடக் கூடாது,என் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிடக்கூடாதென்பது சராசரி பெண்களின் எண்ணமாகும்.


பஞ்சாமிர்த்த்தைப் பார்த்தவுடன் அறுவறுப்பு கொள்பவர் யாருமில்லை. பிடிக்காதவன் வேண்டுமானால் வாங்க மறுக்கலாம்.வழியில் போறவனை கூப்பிட்டு கொடுத்தால், பிடிக்காதவன் கையில் வாங்கி கீழே போடலாம்.பிடித்தவன்……..?
வெளிநாட்டு கலாச்சாரமே வேறு.இந்தியாவின் கலாச்சாரம்? இந்த ஆடை நாகரீகம் எதுவரை போகும்?  
சமீபத்தில் ’துப்பட்டா போடாமல் இருப்பது ஏன்’ என்று ஒரு ஆண் பதிவரின் பதிவின் தலைப்பை பார்த்த்தும் அய்யய்யோ இப்படிப்பட்ட பெண்கள பத்தி ஆண் விமர்சிச்சு பதிவு எழுதி அதே போல கமண்ட்ஸ்களும் குவிந்து மானம் போகுமேனு நினைச்சு போய் பார்த்தேன்,நல்ல வேளை அதை தலைப்போடு நிறுத்திவிட்டு நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தார்.வேறு யாரும் இப்படிப்பட்ட பெண்கள் சம்மந்தமாக விமர்சித்திட வேண்டாமென எண்ணி இதை பதிந்துள்ளேன்.இந்த பதிவு சில பெண்களுக்காக இருந்தாலும்,யார் சொல்லியும் யாரும் கேட்கபோவதில்லை என்றாலும் பெண்ணுக்கு பெண் விட்டுகொடுக்க மனதில்லை.

ஒரு நாட்டிற்கு பெருமை பல விதங்களில் கி்டைத்தாலும்,அதனுள் அந்நாட்டு பெண்களும் அவர்களுக்கான சுதந்திரமும் அடங்குமென்று  எதிலோ படித்த நினைவாக உள்ளது.