*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 20, 2012

நிகழ்ந்தவைகளும், நிகழுபவைகளும் @ 20/1/2012

விசயம் இருக்கு,ஆனால் இந்த பதிவு சுயதம்பட்டமாக இருக்கலாம் சற்று
பொறுத்துக்கொள்ளவும்.புத்தாண்டு,பொங்கல் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நினைக்கிறேன்

எங்களுக்கு உதரலும்,உலரலுமாய் புத்தாண்டு பொங்கல் அமைந்தது.(எங்கள் பகுதியில் அதிகமான குளிர்).இந்தியாவில் இருந்தாலும் நம்மூர் பொங்கல் தினங்களுக்கான ஒரு சதவீத ஒற்றுமையும் இல்லாமல் குக்கர் பொங்கல் செய்ததில் ஆற்றாமையில் வந்தது உலரல்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே வந்த கிராமத்து பொங்கல் காட்சிகள் மனதில் ஏக்கத்தை உண்டாக்கியது.


எங்கள் குடியிருப்பு பகுதியில் பல மாநிலத்தவரும் வசிக்கிறோம்.பேச்சுலர்களும் பல மாநிலத்தவர்களே.கிறிஸ்துமஸிலிருந்து புத்தாண்டு தினம் வரை குழந்தைகள்,பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறும்.டிசம்பர் 27 ஆம் தேதி பெண்களுக்கான சாலட்(காய்&கனி) அலங்கரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.இரண்டு வருடமாக வேறு சில அலங்கரிக்கும் போட்டிகளில் ஆறுதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று  நொந்துபோனதில் இந்த சாலட் அலங்காரத்தில் நான்  கலந்துகொள்ளவில்லை. இங்குள்ளோரின் கலை & அலங்காரத்திறனிலும்  என்னால் ஈடுசெய்ய முடியலப்பா.

120 குடும்பங்களில் 7 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.போட்டிக்கு வந்திருந்த 7 பேரின் அலங்கார சாலட்டுகளை பார்த்தவுடன் “நல்லவேளை நான் கலந்துகொண்டு அசிங்கப்படலன்னு” பெருமூச்சு இழுத்துகிட்டேன்.கீழ்வரும் படங்களை பார்த்தால் உங்களுக்கும் புரியும்.

தக்காளியால் செய்யப்பட்ட ரோஜாக்கள்,ஆப்பிளால் செய்யப்பட்ட பறவை. பச்சை மிளகாய், கேரட், முல்லங்கி, மாதுளை, வெல்லரி, மிளகு, கருந்திராட்சையால் செய்யப்பட்ட படைப்பு.
குடைமிளகாய்,முல்லங்கி,கேரட் துருவல்,சிவப்பு முல்லங்கி ரோஜா,தக்காளியால் செய்யப்பட்டுள்ள சாலட் தோட்டம்.அடுத்த சாலட்டில் உருளைக்கிழங்கு பொம்மை குடைமிளகாய் தொப்பி போட்ருக்கு பாருங்க.
மற்ற சாலட்டுகளை நான் கிளிக்கியது தெளிவாக இல்லை.


பதிவை படிப்பவர்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.என்ன விசியம் என்றால் டிசம்பர் 29 ஆம் தேதி பெண்களுக்கான மாநில வாரியான உடை,அலங்கார போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.அன்று மாலை வரை எனக்கு பங்குகொள்ள ஆர்வமில்லை.மாலை சில பெண்கள் அவரவர் மாநிலத்து சிறப்பு உடைகளை அணிந்து சென்றனர்.(மேக்கப்பை பற்றி சொல்லவே வேண்டாம்).கேரளத்து பெண்ணும் சென்றார்.போட்டியில் திருமதிகள் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பதும்,ஆண்களுக்கு இந்த போட்டியைக்காண அனுமதி இல்லை என்றும் அறிந்துகொண்டேன்.ஒரு பெண் என்னிடம்
"உன் மாநிலத்திற்காக நீ கலந்து கொள்ளவில்லையா,உன் மாநிலத்தை விட்டுத்தரப் போறியான்னு"கேட்டு என்னை உசுப்பேத்திவிட்டார்.


ம்.ஹீம்,,விடக்கூடாது,ஜெயித்தாலும்,தோற்றாலும் பரவாயில்லன்னு நம்மூரு பட்டுப்புடவைய கட்டிகிட்டு,சின்னதா திருநீரு,குங்குமம் இட்டுகிட்டு புறப்பட்டுவிட்டேன்.மேக்கப் அவ்ளோதான். 4,5 மாநிலப் பெண்கள் வலம்வந்து முடித்துவிட்டனர். நான்தான் கடைசி ஆளா பேர் கொடுத்தேன்.அப்பதான் இன்னொன்றும் பார்த்தேன் அந்தந்த மாநிலத்தின் நடனமும் ஆடினார்கள்.இரண்டு நிமிடம் போதுமானது.இசை எல்லோருக்குமே ராஜஸ்தானி இசைதான்.கேட்வாக்கும்((பூனை நடை) தமிழாக்கம் சரியா )போகனும்.


கேட்வாக் இருக்கும்,அப்படியே நடந்து போயிட்டு நம்மூரு சிறப்புகள் சிலவற்றை சொல்லிட்டு வந்திடலாம்னுதான் தைரியமா பேர்  கொடுத்தேன்.இப்ப என்ன பன்றதுனு வேடிக்கை பாத்துகிட்டே யோசிச்சிட்டிருந்தேன்.மொத்தமா 15 பெண்கள்,3 ராஜஸ்தானி,2 உத்திரபிரதேசம்,2 ஒரிஸ்ஸா மற்றும் சிலர்.கடைசியா ஒரு முடிவு பண்ணிட்டேன்.கடைசி ஆள் நான்தான்.என் இதயத்துடிப்பு எனக்கே கேக்க ஆரமிச்சிட்டு.


கடைசி ஆளா போன நான் தைரியமா எனக்குத் தெரிந்த பரதநாட்டிய அபிநயங்களை தப்புத்தப்பாதான் ஆடினேன்.பரதநாட்டியம் தமிழகத்தின் கலை நடனங்களில் சிறப்பானது.நான் அணிந்துள்ள பட்டுப்புடவை வண்ணத்துப்பூச்சி லார்வா நிலையில் தயாரிக்கப்படுவது,பட்டுப்புடவை தென்னகத்தின் சிறப்பான முக்கிய ஆடை,அனைத்து சுப நிகழ்விற்கும் வசதிக்கு தகுந்தாற்போல பெண்கள் பட்டுப்புடவை அணிவதையும் வாங்குவதையும்தான் விரும்புவோம்.(வட இந்தியாவில் பட்டுப்புடவை கிடைக்காது).நெற்றியில் வைக்கும் பொட்டிற்கு மேல் திருநீரும்,கீழ் குங்குமமும் வைப்பது சாஸ்திரம்,மருத்துவ குணமும் உண்டு.அனைத்து வீடுகளிலும்,கோவில்களிலும் திருநீரும்,குங்குமமும் கிடைக்கும்,இருக்கும்.உங்களுக்கு செந்தூரம் கோவில்களில் வழங்கப்படுவது போல எங்கள் கோவில்களில் விபூதி,குங்குமம் வழங்கப்படும் என சிறுகுறிப்பு சொல்லிட்டு வந்த போதும்,போகும்போதும் நம்மூர் வணக்கம் தமிழிலே சொல்லி கைகூப்பி வணங்கிட்டு வந்துட்டேன்.

தேர்வு செய்ய 3 பெண் ஜட்ஜ்கள் மதிப்பீட்டில் பிசியாக இருந்தனர்.ரிசல்ட் அறிவிக்கும் இடைவெளியில் பெண்களுக்கு இரண்டு சின்ன சின்ன விளையாட்டுகள் வைத்தனர்.அதில் நான் தோற்றுவிட்டேன்.பெண்கள் நகைச்சுவை துணுக்குகளும் சொன்னார்கள்.ஒரு குஜராத்தி பெண் சர்தார்ஜி ஜோக் சொன்னார்.வட மாநிலத்தவரான நீங்களே சர்தார்ஜிகளை கலாய்ப்பது போலருக்கே என்றேன்.இது எப்படியோ சில சிந்திக்க வைக்கும் ஜோக்குகளெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளாகிவிட்டது.சர்தார்ஜி கோவிச்சிக்க மாட்டார் என்றார்.


அவர் சொன்ன ஒரு ஜோக் மட்டும் நினைவில் உள்ளது.
சர்தார்ஜி ஃபோன் பன்றார்,
எதிர் முனையில் ஹலோன்னு ஒரு பெண்குரல் கேக்கிறது,
நீதான ஃபோன் பன்னின நீ முதல்ல சொல்லு நீ யாருன்னு,
நான் பஞ்சாப்லேர்ந்து சர்தார்ஜி பேசுறேன் ,
நான் சீதா பேசுறேன்,
ஹரே! நான் அயோத்திக்கு ஃபோன் செய்துட்டேனா,சாரி,ராங் நம்பர்னு சர்தார்ஜி அழைப்பை கட் செய்திட்டாராம்.


இப்போ ரிசல்ட் அறிவிக்கிறாங்க
மூன்றாம் இடம் முதலில் அறிவிக்கப்பட்டது,என் பேர் இல்லை
இரண்டாம் இடத்திலும் என் பேர் இல்லை,முதலிடத்தை கெஸ் பண்ண சில நொடி தந்தனர்.எனக்கு ஆறுதல் பரிசுதான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்,
முதல் இடம்,பரிசு.....என் பெயரை.....அறிவித்தனர்.

என்னால் நம்பவே முடியவில்லை,ஓவர் பீட்டர்னு நினைக்காதிங்கப்பா,நிஜமாதான்.முதல் பரிசு கிடைச்சுட்டுப்பா.


மறுநாள் காலை 30ஆம் தேதி தானே புயல் தமிழகத்தை தாக்கியது.என் தவறான பரதநாட்டியத்தால் தமிழ்நாட்டில் இயற்கை பொங்கி எழுந்துவிட்டதுன்னு வீட்டில் கலாய்ப்பு.


பொங்கல்:


வெண்பொங்கல் வெள்ளை நிறத்துடன் செய்திட்டேன்.கரும்பு ஜீஸ் விற்பனையாளரிடமிருந்து கரும்பு வாங்கியாச்சு.சர்க்கரைப் பொங்கல், நான் கலந்த வெல்லத்தின் கலர் மஞ்சளாக இருந்தாலும் இறுதியாக கரும்பொங்கலாகிவிட்டது.இதென்ன இப்படியாகிட்டுனு சுய சிந்தனையில் கொஞ்சம் மஞ்சள் தூளை கலந்தேன்.பச்சை வண்ண சர்க்கரை பொங்கலாகிவிட்டது. இன்றும் ஆராய்ச்சியா?சாப்பிட்டால் சக்கரை பொங்கல் போலதான் இருக்கிறது என்றார் கணவர்.தென்னகத்து பேச்சுலர் ஆசாமியும் இப்படியொரு பச்சை பொங்கல் இப்பதான் அக்கா சாப்பிடுறேன்னு சொல்லிட்டாரு.

நான் செய்த பொங்கலை பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் கொடுக்கப்போனால், தட்டில் வைத்திருப்பதை பார்த்து என்னை வித்தியாசமாக பார்த்த சகோதரியிடம் ஆஜ் தோ ஹம்கோ மகரசங்கராந்தி ஹே (இன்றுதான் எங்களுக்கு மகரசங்கராந்தி),யே மீட்டாய் சாவல் ஹே(இது சக்கரை பொங்கல்) என்று விளக்கமளித்து கொடுத்துட்டு வந்தேன்.சாப்டாங்களோ,குப்பையில் வீசினாங்களோ தெரியாது.இங்குள்ளவர்களுக்கு 14 ஆம் தேதியே மகரசங்கராந்தி.அவரவர் முறையில் காலையில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தார்கள்.குளிரினால் சூரிய பகவான் 8.30க்கு மேல்தான் சற்றே வந்தார்.


ஒய் திஸ் கொலவெறின்னு இந்த பதிவை படிப்பவர்கள் மனதில் தோன்றிற்கலாம் அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்

இந்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிட்டு,சர்ச்சைகளும் ஆகிட்டு.வட இந்திய சேனல்களிலும் அடிக்கடி இந்த பாடல்தான் வருகிறது.எங்க பக்கத்து வீட்டு வாண்டு பாடுது,ரோட்டோர கடைகள்,செல்லும் வாகனங்களிலும் இந்த பாடலை கேட்கமுடிகிறது.இங்கு கல்யாணம் மற்றும் சில நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்களில் “அப்படிப் போடு(விஜய் பாடல்)” இடம்பெறும்,இப்போது இந்த கொலவெறி பாடலும் இடம்பெறுகிறது.

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தொலைபேசியில் தனுசுடன் பேசிய விவேக் அவர்கள் இது தமிழ்பாடல் இல்லை, இங்கிலிஸ் பாடல்ன்னு இங்கிலிஸ்காரன்தான அவங்க அனுமதி இல்லாம பாடலை வெளியிட்டதற்கு எதிர்க்கனும்,ஏன் மற்றவங்களெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு கேட்டார்.


சரி இந்த வம்பு வேணாம்.அடுத்த பதிவில் சந்திக்கலாம்

21 comments:

Angel said...

வண்ணமயமா பசுமையான பொங்கல் கொண்டாடியிருக்கீங்க .
//சாலட்(காய்&கனி) அலங்கரித்தல் போட்டி //

அலங்காரம் மிக அருமை .

அப்புறம் பூனை நடைபோட்டியில்
என்ன பரிசு என்று சொல்லவில்லையே ??.
பச்சை பருப்பு சேர்த்ததால் பொங்கல் பச்சை நிறமா வந்திச்சோ ?? டவுட்டு
விழாக் கொண்டாட்டங்கள் ஒழுங்கு செய்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும் .நல்ல விஷயம் .

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

வாங்க,
என்னது பூனை நடை போட்டியா?.
பரிசு:காதணியும்,கழுத்தணியும்.
ஆர்ட்டிஃபிசியல் ஜ்வல் செட்.அதையும் ஃபோட்டோ எடுத்து போடலாம்னு பார்த்தேன்,ரொம்ப ஓவரா இருக்குமோன்னு விட்டுடேன்.வருகைக்கு நன்றி.தங்கள் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள் அம்மா.

இராஜராஜேஸ்வரி said...

முதல் பரிசு கிடைச்சுட்டுப்பா.//

நிறைவான வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

பசுமைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் பரிசு பெற்ற உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அதுவும் தமிழ்நாட்டுக்கு, தமிழுக்கு, தமிழச்சி ஒருவருக்கு, பட்டுப்புடவைக்கு, வணக்கம் கூறியதற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான்.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

போட்டியில் வெற்றி பெறுவதை விட, பங்கெடுப்பதே வெற்றியின் முதல்படி என்று நான் எல்லோருக்குமே அடிக்கடிச் சொல்வேன்.

இதுபோன்ற தங்களுக்கு விருப்பமுள்ள எல்லாப்போட்டிகளிலும் தைர்யமாகப் பங்கு கொள்ளுங்கள்.

சிறப்பு உடையுடன், பரதநாட்டியம் ஆடுவது போல கற்பனை செய்து பார்த்தேன். நல்லாவே இருந்தது.
வீடியோ படம் எடுக்கச் சொல்லி, பதிவுடன் இணைத்திருக்கலாமே!

தமிழ்மணம்: 3
உடான்ஸ் : 4
இன்ட்லி: 3

vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்
//பச்சை பருப்பு சேர்த்ததால் பொங்கல் பச்சை நிறமா வந்திச்சோ ?? //

அதுவும் மஞ்சள் நிற பச்சைப்(பாசிப்)பயிறுதான் சேர்த்தேன்.டேஞ்சர் வெல்லமும் மஞ்சளும்தான் பச்சை வண்ணமாகிட்டு.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெத்னவேல் சார்
தங்கள் வருகையிலும் வாழ்த்திலும் மகிழ்கிறேன்,நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி
மேடம் தங்கள் பாராட்டிலும் வாழ்த்திலும் மகிழ்கிறேன்,நன்றி.அந்த கலர் பொங்கலை என் வீட்டாரால் மறக்க முடியாது மேடம்

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

சார்,கருத்திற்கும்,பாராட்டிற்கும்,வாக்கிற்கும் நன்றிகள்.அன்று பரிசு அறிவித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை தங்கள் கருத்து மீண்டும் அளித்தது.நன்றி சார்.

பால கணேஷ் said...

அடடே... முதல் பரிசு கிடைத்ததற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! தானே புயல் வந்ததற்கு நீங்கதான் காரணம்னு கலாய்ச்சாங்களா? சிரிப்பை அடக்க முடியல எனக்கு. உங்களோட இந்தப் பதிவு எனக்கு அடுத்த பதிவு எழுத ஐடியா கொடுதுருச்சு. அதுக்காக ஸ்பெஷல் தாங்க்ஸ்! (செக், ட்ராப்ட் எல்லாம் கேக்கக் கூடாதுப்பா, சொல்லிட்டேன்)

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.நல்லா சிரிங்க.உங்களுக்கு தோன்றிய ஐடியாவை நானும் உங்க பதிவில் எதிர்பார்க்கிறேன்.பேமெண்ட் கேக்கமாட்டேன்.

RAMA RAVI (RAMVI) said...

முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள் ஆச்சி.
சாலட் அலங்காரப்படங்கள் அழகாக உள்ளன.

பொங்கல்ல கூட பசுமைப்புரட்சி செய்துட்டீங்களா?

கீதமஞ்சரி said...

கடைசியாய் கலந்தும் முதலாவதாக வந்து தமிழர்கள் பெருமையைக் காப்பாற்றியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆச்சி. சர்க்கரைப் பொங்கல் எப்படி இருந்தால் என்ன? பொங்கல் தினத்தன்று பொங்கல் செய்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உண்டு மகிழ்ந்ததே பெரிய விஷயம்தானே!

ADHI VENKAT said...

முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துகள் ஆச்சி. தமிழருக்கு வடநாட்டில் நல்ல மதிப்பு தான்.

நானும், ரோஷ்ணியும் நடுங்கும் குளிரோடு பொங்கலை கொண்டாடினோம். அவர் ஐந்து நாட்கள் ஜபல்பூர் சென்றுவிட்டபடியால்....வெறும் சர்க்கரைப் பொங்கலோடு சரி. வடை, போளி, பாயசம் எல்லாம் செய்ய வில்லை.
வட மாநிலங்களில் கிடைக்கும் வெல்லத்தில் செய்தால் பச்சையாக மாறி விடும். நான் நம்மூர் மண்டை வெல்லம் தான் வாங்கி செய்தேன்.

எங்கள் எதிர் வீட்டுப் (உத்தராகண்ட் மாநில)கத்வாலி பையனின் ரிங்டோன் கொலவெறி தான்...:(

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராம்வி


வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க,சாலட் செய்வதில் எனக்கெல்லாம் இப்படியொரு கிரியேட்டிவிட்டி தோனிற்கவே தோன்றிற்காதுங்க.
பசுமைப்புரட்சியா !எல்லாம் தானா நடக்குது!


@கீதா
வாழ்த்திலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.நம்மூரா இருந்தா அக்கம் பக்கத்திலிருந்து நல்ல பொங்கல் கிடைத்தாலும் கிடைத்திருக்கும்.அது மிஸ்ஸாயிட்டு.

@ஆதி

பச்சை வண்ணத்திற்கு முதல் நிலையில் இருந்த கரும்பொங்கலை பார்த்த என் மகள் சீ,சீன்னு சொல்லிட்டாள்.எங்கள் பகுதி கேரளா மளிகைக்கடையாளரும் காணாபோய்ட்டார்.அவர் கடையிலாவது நம்மூர் வெல்லம் கிடைத்திருக்கும்.வாழை இலை கூட இல்லையேன்னு வயிற்றெரிச்சலா இருந்துச்சுங்க.அம்மா அப்பாவுடன் கொண்டாடிய பொங்கல்கள் நினைவிற்கு வந்து வாட்டியது.

வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்...

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
வாழ்த்திற்கும்,கருத்துரைக்கும் நன்றிகள்.

சாகம்பரி said...

நான் நம்புகிறேன் ஆச்சி. நேர்த்தியான உங்கள் கை வண்ணங்கள் எனக்கு உங்களுடைய திறமையை சொல்லியிருக்கின்றன. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சாகம்பரி

வாங்க மேடம்.தங்கள் வருகையிலும்,அன்பான கருத்திலும் மகிழ்கிறேன்,தங்கள் நம்பிக்கையை எப்போதும் நிலை நிறுத்த முயற்சிக்கிறேன். நன்றி மேடம்