ஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம்,
கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,
சாதி,மத,மொழி பேதமில்லை,
இந்தியன் என்ற உணர்வு
ஊற்றெடுக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை,
ஒற்றுமையில் வேற்றுமை இல்லை
வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை
தோல்வியென்றாலும் சிறியவர் முதல்
பெரியவர் வரை ஒரே துக்கம்
அது
கிரிக்கெட்
கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்கு சென்று பார்க்கனும்னு அவசியமில்லை,நாம் விளையாட கூட வேண்டாம்,க்ரிக்கெட் விளையாட்டு முறைகளை தெரிந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தாலே போதும்.மைதானத்தில் பார்ப்பதைவிட அருகேவும்,துல்லியமாகவும் பார்க்கலாம்.( யாருக்குமே தெரியாத ரொம்ப புது விசயம்னு சொல்ல வந்துட்டியானு கேட்கப்பிடாது).
தொலைக்காட்சியில் பார்த்துதான் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.
சரி இதெல்லாம் தெரிந்த விசியம்தான்.
சிலவற்றை கேளுங்க:
எனக்குத் தெரிந்த ஒருவர் தான் டீ.வியில் மேச் பார்த்தால் இந்தியா தோற்றுப் போய்டும்னு. வெற்றியோ தோல்வியோ மேச் முடிந்த பிறகு ரிசல்ட் தெரிந்து கொள்கிறேன் என்பார்.
சிலருக்கு சிலருடன் அமர்ந்து மேச் பார்த்தால் இந்தியா தோற்று போய்டும்னு பயம்,சந்தேகம்.
பலருக்கு இந்தியா ஜெயித்து விட்டால் இமாலய சந்தோஷம்,தோல்வியடைந்தால் அதேயளவு துக்கம்.
சிறு வயதில் எங்க மாமா ஒருத்தர் இந்தியா விளையாடும்போது வீட்டில் டீ,வீ யில் கிரிக்கெட் மேச் பார்ப்பார்.அவர் பார்த்தால் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,என்கிட்ட காசு கொடுத்து பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இந்தியா ஜெயிக்கனும்னு சாமி பேருக்கு அர்ச்சனை செய்திட்டு வர சொல்லுவார்.பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போய் விளக்கு போடச் சொல்வார்.இந்தியா தோல்வியடைந்தால் எனக்கு திட்டு வேற விழும்.கோவிலுக்கு போகும்போது அசகுணமா யாராவது தென்பட்டாங்களானும் கேப்பார். சில வருடங்களுக்குப் பின் எனக்கு பதில் கோவிலுக்கு போக வேற ஆள நியமிச்சிட்டாரு.(ராசி சரியில்லைனுதான்)
பார்த்த/பாக்கத மேச்சுகளை டிவிடி/சிடி யில் போட்டு பார்ப்பது சிலருக்கு பழக்கமாம், கேள்விப்பட்டேன்.
இந்தியாவின் வெற்றி / தோல்விக்கு நாட்டுப்பற்றுக் கொண்டு பெட்டுக் கட்டுவது, அதாவது பந்தையம் அதாவது வெற்றி என்றால் நான் அத செய்வேன்,தோல்வி என்றால் நீ இத செய்.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும்,நேற்று நடந்த மேச்சில் இந்தியா ஜெயிச்சாதான் வாங்கி வச்சிருக்க பட்டாசை வெடிக்கனும்னு அப்பா,அம்மா சொல்லிவிட்டதால் கிரிக்கெட் என்றால் மட்டையால் பந்தை அடிக்கனும் என்பதை மட்டுமே தெரிந்த, மட்டை உயரம் கூட இல்லாத,பக்கத்து வீட்டு வாண்டு இந்தியா ஜெயிக்கனும்,பட்டாசு வெடிக்கனும்னு தவம் கிடந்தது,அது ஆசை நிறைவேறிட்டுங்க.
இனி வர ரெண்டாம் தேதி பாத்திடுவோம்.
கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,
சாதி,மத,மொழி பேதமில்லை,
இந்தியன் என்ற உணர்வு
ஊற்றெடுக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை,
ஒற்றுமையில் வேற்றுமை இல்லை
வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை
தோல்வியென்றாலும் சிறியவர் முதல்
பெரியவர் வரை ஒரே துக்கம்
அது
கிரிக்கெட்
கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்கு சென்று பார்க்கனும்னு அவசியமில்லை,நாம் விளையாட கூட வேண்டாம்,க்ரிக்கெட் விளையாட்டு முறைகளை தெரிந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தாலே போதும்.மைதானத்தில் பார்ப்பதைவிட அருகேவும்,துல்லியமாகவும் பார்க்கலாம்.( யாருக்குமே தெரியாத ரொம்ப புது விசயம்னு சொல்ல வந்துட்டியானு கேட்கப்பிடாது).
தொலைக்காட்சியில் பார்த்துதான் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.
சரி இதெல்லாம் தெரிந்த விசியம்தான்.
சிலவற்றை கேளுங்க:
எனக்குத் தெரிந்த ஒருவர் தான் டீ.வியில் மேச் பார்த்தால் இந்தியா தோற்றுப் போய்டும்னு. வெற்றியோ தோல்வியோ மேச் முடிந்த பிறகு ரிசல்ட் தெரிந்து கொள்கிறேன் என்பார்.
சிலருக்கு சிலருடன் அமர்ந்து மேச் பார்த்தால் இந்தியா தோற்று போய்டும்னு பயம்,சந்தேகம்.
பலருக்கு இந்தியா ஜெயித்து விட்டால் இமாலய சந்தோஷம்,தோல்வியடைந்தால் அதேயளவு துக்கம்.
சிறு வயதில் எங்க மாமா ஒருத்தர் இந்தியா விளையாடும்போது வீட்டில் டீ,வீ யில் கிரிக்கெட் மேச் பார்ப்பார்.அவர் பார்த்தால் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,என்கிட்ட காசு கொடுத்து பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இந்தியா ஜெயிக்கனும்னு சாமி பேருக்கு அர்ச்சனை செய்திட்டு வர சொல்லுவார்.பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போய் விளக்கு போடச் சொல்வார்.இந்தியா தோல்வியடைந்தால் எனக்கு திட்டு வேற விழும்.கோவிலுக்கு போகும்போது அசகுணமா யாராவது தென்பட்டாங்களானும் கேப்பார். சில வருடங்களுக்குப் பின் எனக்கு பதில் கோவிலுக்கு போக வேற ஆள நியமிச்சிட்டாரு.(ராசி சரியில்லைனுதான்)
பார்த்த/பாக்கத மேச்சுகளை டிவிடி/சிடி யில் போட்டு பார்ப்பது சிலருக்கு பழக்கமாம், கேள்விப்பட்டேன்.
இந்தியாவின் வெற்றி / தோல்விக்கு நாட்டுப்பற்றுக் கொண்டு பெட்டுக் கட்டுவது, அதாவது பந்தையம் அதாவது வெற்றி என்றால் நான் அத செய்வேன்,தோல்வி என்றால் நீ இத செய்.
