*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 19, 2012

மரண வாக்குமூலம்

போலிசார் :   உனக்கு எப்படி ஏரோப்லேனில் அனுமதி கொடுத்தாங்க?

அவர்:                என் எஜமானின் முயற்சிங்க

போலிசார் :   ஏரோப்லேனில் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றினாயா?

அவர்:                       எல்லோரையும் போலவே பெல்ட் போட்டுகிட்டேன்,
       
                                   காதில்  பஞ்சும்    வைத்துக்கிட்டேன்.முதல் முறையா 

                            போறேனுல, எனக்கும் ஆசையும் ஜாக்கிரதை உணர்ச்சியும்  

                               அதிகாமாவே இருந்துச்சு.

போலிசார் :       யாராவது சந்தேகிக்கும்படி இருந்தார்களா?

அவர்:                    இல்லங்க,சிலர் படிச்சிட்ருந்தாங்க,சிலர்

                            தூங்கினாங்க,பயணிகளுக்கு வேண்டியதை பணிப்பெண்கள்

                               நல்லபடியா கவனிச்சிக்கிட்டாங்க ஆனா...
...

போலிசார் :         என்ன ஆனா?

  அவர் :                 சிலர் ஏர்ஹோஸ்டசை சைட்டடிச்சாங்க

போலிசார் :         ச்சே,....

அவர்:               சும்மா இருக்கும் நேரத்தில் அந்த பொண்ணுங்க மேக்கப்    
                               போட்டதையும் என் கண்ணால பாத்தேன்.

போலிசார் :      அட,,,அதை விடு , இந்த பைலட்.....

அவர்:                அவர நினைச்சுதான் எனக்கு ரொம்ப வருத்தம்

                            எல்லோரும் ஜாலியா வந்தாங்க,அவருதான் ரொம்ப சின்சியரா    

                              ஏரோப்லேனை ஆப்ரேட் பண்ணிட்டிருந்தாரு.

போலிசார் : நீ எப்படி பார்த்த ?அங்க போனியா?

அவர்:               என்னால ஒரு இடத்துல எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும்?

                            அதான் அங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன்.

போலிசார் : சரி,இந்த விமான விபத்து எப்படி நடந்துச்சு?விபத்துக்கு முன்

                             என்னதான்  நடந்துச்சு?

அவர்:                   நாந்தான் பைலட் மேல பரிதாபபட்டு இந்த டிரைவிங்கை என்னால செய்ய முடியாதா,நீங்க பயணிகள் போல என்ஜாய் பன்னுங்கனு சொல்லிப்பார்த்தேன்,அவர் நகரவேயில்ல.எங்களுக்குள் நடந்த வாக்கு வாதத்திலும் கைகலப்பினாலும் இந்த விபத்து ஏற்பட்டது.

குதிப்பதும் தாவுவதும் எனக்கு பழக்கம்,மனிதர்களைப் போல டபக்குனு விழுந்து சாகாமா எதோ இந்தளவுக்காவது தப்பிச்சேன்.

                                           வாக்குமூலம் கொடுத்தவர் இவர்தான்.
                                                   படம்  கூகுளில் எடுத்தேன்



குறிப்பு:எனக்கு மெயிலில் வந்த நகைச்சுவை கதையில் பைலட் ஏர்ஹொஸ்ட்டசை சைட் அடிச்ச நேரத்தில் குரங்கு விமானத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்பதை இப்படி மாத்திபுட்டேன்.
பரவாயில்லையா ,நல்லாருக்கா??????????. 

Oct 8, 2012

கொன்று குவித்திடுவோம்



எவ்வழி வந்தீர்கள் அந்நியர்களே!
தரை வழியா,வான் வழியா?
காற்றா,நீரா? எவ்வழி?
எங்கள் உலகத்தில்
உங்கெளுக்கென ஒரு உலகமா?
மனித வாழ்வை
வேடிக்கைப்  பார்க்க
அவன் தலை மீதே
அமரலாமா?அல்லது
தலைகளை கொய்ய முடியாமல்
தலை மீது ஊர்ந்து குடித்தனமாக
கூத்தடிக்கின்றீர்களா?
சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை
பாகுபாடற்று சொறியவைத்து
சாதனையா படைக்கின்றீர்கள்?
கூந்தலை பேணாமல் போனதால்
உள் நுழைந்த உங்களுக்கு
பேண் ”((பேன்))
என்ற பெயர் வந்ததோ?
பாவ,புன்யம்,பார்க்காமல்
கொல்லி ஸாம்ப்பு ஸ்நானமும்
தங்களுக்கான சீப்பால் இழுத்தும்
தங்களை கொன்று குவிக்காமல்
விடமாட்டோம்.................!!!
சட்ட மறுப்போ தண்டனையோ
கொலையாளிக்கு இல்லை,
வந்ததும் வாழ்ந்ததும்
ஓசையற்றதில்
உங்கள் ஆயுள் ஓசையுடன்
நிறைவடைகின்றது.
ஆத்மா சாந்தி அடையட்டும்.
                                     (முற்று)