*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 23, 2012

உன்னைப் போல் ஒருவன்

அன்புடன் வந்தாய்
ஆவலுடன் அரவணைத்தேன்
இடித்தாலும்
ஈ என்று இலித்தாலும்
உரசினாலும் தேய்த்தாலும்
ஊ என்று அலரினாலும்
எத்தனை விதவிதமாக
என்னென்ன செய்தாலும்,
’ஏய்’ என்றுகூட குரலிட மாட்டாய்
”ஐ” பிரமாதம்
”ஒ” என்றாலும்
”ஓ”என்றாலும்
மெளனமாய் இருப்பாய்!
கற்றலின் தொடக்கத்தில்
மற்றவரின் வாயும் வயிறும்
எரிந்த போதும்,கோபத்தில்
போட்டு உடைத்த போதும்
உன்னை விட்டு எங்கு போவேன்
என்று கவிழ்ந்திருப்பாயே!
என் முனகல்களையும்
பொறுத்திருப்பாயே!
என் அன்பு
”கடாயே”
உழைத்து உழைத்து
தேய்ந்து போனதில்
உன்னைப் போல் ஒருவன்
வந்தாலும்,உன்னைப்
பிரிய மனமில்லை.


(ஹி...ஹி...எப்புடி)