*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jul 1, 2013

நிகழ்ந்தபவைகளும்,நிகழுபவைகளும்@1/7/13

உள்ளாடை தெரியக் கூடாதென்று ”சிம்மிஸ்” என்று ஒரு பனியன் டைப் உள்ளாடையை அணிந்து அதற்குமேல் சுடிதார் அணிவதுண்டு.

இப்போ இங்க பல பெண்கள் இந்த இரண்டாம் சிம்மிஸ் அணிந்திருப்பதை தோல்பட்டை முழுவதும் காமிக்கும்படி மூன்றாம் சிம்மிஸ் அணிந்து வலம் வருகின்றார்கள்.அந்த உடையில் சிலருக்கு வயிற்றுப் பகுதி தெரியும் அளவிற்கு கட்டிங் உள்ளது.சிலருக்கு இரண்டாம் சிம்மிஸ் வயிற்றை மறைத்துள்ளது.இந்த உடைக்கு பெயர் என்னனு தெரியாததால் இந்த விளக்கம்.

சிறு வயதில் தமிழகத்தில் நான் பிரபலமான கோவிலுக்கு பக்கத்தில் குடியிருந்தேன்,பக்கத்தில் நாகூர்,வேளாங்கன்னி உண்டு.அதனால் தினம் தினம் சுற்றுலா பயணிகளை பார்த்ததுண்டு.அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுலா மக்களையும் பே,பே னு பார்த்ததுண்டு.ஏனெனில் வெளிநாட்டவர் அதிக கலராகவும் அரைகுறை ஆடையுடன் வருவார்கள்.

இப்போது இந்திய மெட்ரொ பெண்களை ,ஆடை கலாச்சாரத்தில் வெளிநாட்டவர் வியந்து பே,பே னு பார்த்தாலும் ஆச்சர்யமில்லை.


தில்லியின் நவ நாகரீக இளம் பெண்கள் சிலர் உடுத்தியிருந்த  ஆடையின் முன்பக்கத்தில் எழுதியிருந்த சில வாசகங்கள் .

"facebook
lets tweet"

"have a cup of milk"

"u cant forget this"

"fuck french connection"(இதற்கு என்ன அர்த்தம்)

வெளிநாட்டவரை வியந்து பார்ப்போமே தவிர முகம் சுளிப்பு வந்ததில்லை,முக்கால் ஜீன்ஸ்,ஸ்லீவ்லஸ் டாப்ஸ் அட்டாச்டு மினி பாட்டாம்(பேர் தெரியல)சகஜாமாயிட்டு.

ஆடை அணிவது அவரவர் சுதந்திரம்.இவைகளை பார்த்துப் பார்த்து கண்கள் பூர்த்து போனால்தான் பார்ப்பவர் பார்வையில் மாற்றம் வரும்.

இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அதுபாட்டுக்குதான் போகுதுங்க.தன் கேள் ஃபிரண்டை எவன் எவனோ எங்கெங்கயோ பாக்குறானுங்களுனு கவல இல்லாம அவன் வேலைய மட்டும் பாத்துகிட்டு அந்யோந்யமா போறான் பாருங்க (கொஞ்சல்,உரசல்)அங்க வெளிப்படுது அவனவன் பெருந்தன்மை.

இன்றுவரை வெளிநாட்டவர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வதை நான் பார்த்ததில்லை,அந்நிய மோகம் கொண்டவர்கள் அல்லது தன் காதலி/கேள் ஃப்ரண்ட்ஸ்களுடன் பல பொது இடங்களில் நம் நாட்டு ஜோடிகள் பலர் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனரே!

பார்த்ததை சொன்னேன்,எப்படி இப்படி சொல்லப்போச்சுனு கேள்வி கேட்டால் தெரிந்ததை சொல்றேன்!



சம்பந்தமில்லாம என்ன இந்த போட்டோனு பாக்றிங்களா?ஹரியானாவில்  ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது ஓட்டுநரின் சாவகாசம்தான் இது

  இது ஹரியானாவின் ஒரு bsnl அலுவலகத்தின் செக்கியுரிட்டி அமரும் நாற்காலி,ஒரு நேரம் கம்பி போட்டு கட்டிருக்கும்.இப்போ கேபிள் போட்டு கட்டிருக்கு.2008 லேர்ந்து இப்படித்தான் சீரியாஸா இருக்கு.