*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 14, 2011

இவரின் பார்வையில் காதல் - பகுதி இரண்டு

  • எத்தனைக்கு அன்பு செலுத்துகிறோமோ,அத்தனைக்கும் சார்ந்திருக்கிறோம் நம் அன்புக்குரியவரும் நம்மைச் சார்ந்திருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறோம்
  •  
  • காதல் இன்னதென்று அறிய மாட்டோம்.அதன் அடையாளங்களான சந்தோசம்,வலி,பயம்,கவலை இவற்றை அறிவோம்.

  • காதல் இயல்பானது,காலையில் உதிக்கும் சூரியன் போல .

  • காதல் மெய்ப்பொருள்.தியானம் மெய்ப்பொருளின் அழகு.

  • காதல் துயரத்தின் முடிவு.எங்கே துன்பங்கள் விலகிப் போகிறதோ,துயரங்கள் விடை பெறுகிறதோ அங்கே  காதல் இருக்கிறது.

  • காதலுக்காக ஏங்குங்கள் ,ஏங்காமல் காதல் இல்லை.

                
  • காதல் என்பது ஒட்டுமொத்த நேசிப்பு.கருணையின் மறு வடிவம்.

  • புலன்களால் உணர்வது ஒரு சிந்தனை.அது காதலாகாது.

  • கற்பனை,எண்ணம்,பற்றுதல்,புறக்கணிப்பு எல்லாம் வெறும் புகைச்சுருள்கள்,புகை இல்லாத போது காதல் கொழுந்து விட்டு எரியும்.

  • உள்நோக்கமும்,நிர்பந்தங்கள் அற்றதுமான காதல் நிலைக்கும்.

இந்த காதல் வாசகங்களுக்கு சொந்தமானவர் திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

இவருடைய  புத்தகத்திலிருந்துதான்  இந்த காதல் வாசகங்களை சேகரித்தேன்.  


இவர் சொல்லாத விசியங்கள் இல்லை.அதில் காதலும் ஒன்று.

4 comments:

raji said...

நான் ஜே கே கொஞ்சம் வாசித்திருக்கிறேன்
என்றாலும் இது நான் அறியாத,படிக்காத
அவரது பல சிந்தனைகளுள் ஒன்று
பகிர்வுக்கு நன்றி

Angel said...

thanks for sharing(i tried to install tamil font ,i repeatedly get a error msg saying my system doesnt support ,blah,blah)dont mistake me for writing in english.

ADHI VENKAT said...

பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு நன்றி.

no proplem,thanks angelin.

ஆதி அவர்களுக்கு நன்றி